சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சையளித்த டாக்டர் பால் ராம் சங்கர், டாக்டர் சோமசுந்தரம் ஆகிய இருவரையும் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் தலைமுறைவாகியுள்ளனர். இருவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
கால்பந்து வீராங்கனை மறைவு குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது அந்தக் கற்களை உடைப்பது யார் என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார், சிவக்குமார் சிந்தாரிப்பேட்டை.