கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பாக கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பிலிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் கோவை மாநகர் முழுவதிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறையினர் இணைந்து கோவை மாநகரில் 33 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மாநகரில் உக்கடம், புல்லுக்காடு, போத்தனூர், ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையை முன்னிட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையால் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
தமிழக துணை தலைமை நிருபர்
-M.சுரேஷ்குமார்.