கோவை மாநகரில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 1,000 டன் குப்பையில் இருந்து 150 டன் உரம் தயாரிக்க அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
துணை ஆணையர் டாக்டர் எம் ஷர்மிளா தலைமையில், திரு. பிரதாப் ஆகியோர் நகரிலுள்ள 5 மண்டலங்களிலும் உள்ள மண்டல துப்புரவு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பொறுப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரு. பிரதாப் கூறுகையில், “தற்போதுள்ள ஆறு நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் (எம்.சி.சி.) தவிர, மேலும் நான்கு சமீபத்தில் செயல்படத் தொடங்கின. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உள்ள உரம் தயாரிக்கும் அளவு 100 டன் கொள்ளளவு கொண்டது. ஆனால் தற்போது பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த யூனிட்டில் 60 டன் உரம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம் என்றும், அதை விரைவில் சரி செய்வோம் என்றும் கூறினார்.
ரேஸ்கோர்ஸ் ரோடு, ராஜா தெரு, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, அவிநாசி ரோடு என நாள் முழுவதும் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படும் இடங்களில், இரவு நேரத்தில், அதிகளவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குப்பைகளை அகற்ற வேண்டும்,” என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மு. ஹரி சங்கர், கோவை வடக்கு.