ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக கடிகார நாள் கொண்டாடப்பட்டது!!

வுண்ட் டேபிள் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற விழாவில் வடகோவை பகுதியில் உள்ள கடிகார கோபுரம் முன்பாக கடிகார நாள் கொண்டாடப்பட்டது.

வடகோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள கடிகார கோபுரம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக புதுப்பிக்கப்பட்டது.. இந்நிலையில் ரவுண்ட் டேபிள் இந்தியா தினத்தை முன்னிட்டு இந்த கடிகார கோபுரத்தின் முன்பாக ஆர்.டி.ஐ கடிகார கோபுரம் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக வட கோவையில் கடிகார கோபுரம் நாள் கொண்டாட்டப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மனீஷ் லகோடியா கலந்து கொண்டார். மேலும் விழாவில், கோவையின் மற்றும் ஏரியா செவன் கிளை தலைவர்கள் மற்றும் பிற பகுதி வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் குறித்த பிரச்சார வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வாகனம் கடந்த செப்., 11ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் துவங்கியதாகவும், நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 136 ரவுண்ட் டேபிள் அமைப்பு கிளைகள் உள்ள நகரங்களுக்கு இந்த வாகன பயணம் செய்ய உள்ளதாகவும், வரும் டிசம்பர் 16ம் தேதி ராஞ்சியில் முடிவடைய உள்ளதாக ரவுண்ட் டேபிள் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp