ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள்!

ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ,மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெறும் இதில்,2008 ஆம் ஆண்டு முதல் படித்த பல்வேறு துறை சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் போது பெற்ற அனுபவங்களையும்,தற்போது பல்வேறு துறைகளில் நல்ல நிலைகளில் பணியாற்றி வரும் அனுபவங்களையும் மாணவ,மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு பேசுகையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ,மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தாளாளர் சாந்தி தங்கவேலு,துணை தலைவர் அக்‌ஷய், கல்லூரி முதல்வர் முனைவர் சத்தியசீலன்,கல்லூரி மேராசிரியர்கள்,ஊழியர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp