சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஜெயராஜ் (எ)செல்வம்(65). எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று தனது குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, காரில் சிங்கம்புணரிக்கு திரும்பி இருக்கிறார். காரை அவரது மருமகன் மோகன்தாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்கள் பயணித்த வாகனம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஏரக்காபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் மோதியது.
சம்பவ இடத்திலே ஜெயராஜ் பலியானார். காரை ஓட்டி வந்த இவரது மருமகன் மோகன்தாஸ், மகள், மனைவி, பேரன், பேத்தி உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு, நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.