தீபத்திருநாள் அன்று காலையில் முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி!

தீபத்திருநாள் 6-12-2022 அன்று காலையில் முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி!

திருவண்ணாமலை; சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத்திருநாள் 6-12-2022அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீபத்திருவிழா அன்று காலை 6 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் ,எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும். மலையேற அனுமதி கோறும் பக்தர்கள் தங்களது அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகிலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழியில் மலையேற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. *6-12- 22 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்குஅனுமதிக்கப்படுவார்கள். மாலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் பொழுது திரும்பி கொண்டு வர வேண்டும்.மலையேறும் பக்தர்கள் கற்பூரம் பட்டாசு மற்றும் எளிதில் பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ தீபம் ஏற்றவும் கூடாது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்தி களுக்காக

-P. இரமேஷ் வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp