திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜி எம்எல்ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை. Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றால் தமிழக மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி வருகிற 09-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பேரூராட்சிக் பகுதிகளில் 13-தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாநகர பகுதி மற்றும் நகராட்சி மற்றும் 14-ம் தேதி புதன் கிழமை அன்று ஒன்றியங்களில் அறிவிப்பு. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு கண்டணம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.