கோவை விழாவில் பழங்கால கார்கள் அணிவகுப்பு! பார்வையாளர்கள் உற்சாகம்!!

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறு‌ம்‌ விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. கோவையின் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொழில் முனைவோர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆம் ஆண்டினை வரவேற்கும் விதமாக கோவை விழா தொடங்கியுள்ளது. விழாவில் முதல் கட்டமாக இசைக்கு நீரூற்று தலையசைக்கும் வகையில் அசத்தலான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் லேசர் லைட் சோ நிகழ்வானது ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி எட்டாம் தேதி வரை மாலை 6:30 மணி முதல் 6:30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவை விழாவில் அனைத்து கலாச்சாரங்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இது கோவை மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் சேர்க்கும் வகையில் விழா நடத்தப்படுகிறது. விழாவில் பொழுதுபோக்கு அம்சங்களாக சமூக நாடகங்கள், ஆன்மீக நாடகங்கள் நடைபெற உள்ளன.‌

இந்நிலையில், இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன்,‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 100 பழைய மாடல் கார்கள், பைக்குகள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன், பழைய ஜீப், உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர் லேம்பர்டா, ஜெடாக் வகை உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கார்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒழிங்கிணைப் பாளர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp