சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடி ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணயகுழு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது. இதற்கான ஆய்வுக் குழுக்கள் ஆண்டுதோறும் வெவ்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும்.
இந்தச் சான்றிதழை பெறுவதன் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் மேம்பாட்டிற்காக சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
அதன்படி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்கான தகுதி ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அப்போது தேசிய தர நிர்ணயகுழு அதிகாரிகள் மருத்துவர் சசிகலா மற்றும் கீர்த்திமான் மகந்தா தலைமையிலான குழுவினர், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் அந்தக் குழுவினர், அங்குள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை நோயாளிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்பு அங்குள்ள ஆய்வகம், மருந்தகம், பிரசவ வார்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கூடங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது துணை இயக்குநர் விஜய் சந்திரன், பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் நபீஸா பானு, சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முத்தமிழ் செல்வி, செந்தில் மற்றும் பிரேம், மண்டல தர ஆலோசகர் ஆனந்த செல்வசங்கர், மாவட்ட தர ஆலோசகர் லட்சுமி, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், நிலைய பணியாளர்கள் உடன் இருந்தனர். Mentorகள் ஜானகி மற்றும் நதியா ஆகியோர் ஆய்வில் உதவினர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.