ஒற்றை பேருந்தை நிறுத்தும் அளவுக்கே சுருங்கி போன பழையை பேருந்து நிலையம்!! வால்பாறையில் பயணிகள் அவதி!!!

ஒற்றை பேருந்தை நிறுத்தும்

ஒற்றை பேருந்தை நிறுத்தும் அளவுக்கே சுருங்கி போன பழையை பேருந்து நிலையம்!! வால்பாறையில் பயணிகள் அவதி!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியானது நூற்றுக்கணக்கான எஸ்டேட் பகுதிகளும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்லக்கூடிய ஒரு சுற்றுலா தளம் ஆகும்.

வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளுக்கும் மற்ற ஊர்களுக்கு செல்லவும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் வால்பாறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அக்கா மலை, வெள்ள மலை, பொள்ளாச்சி, ஐயர்பாடி ,ரொட்டி கடை, வாட்டர் பால்ஸ், ஆழியாறு ஆகிய பகுதிகளுக்கு இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

ஆனால் இந்த பேருந்து நிலையம் மிகவும் குறுகளாகவும் பேருந்துகள் நிற்க போதுமான வசதி இல்லாமலும் உள்ளது.இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் சாலையில் நின்று பேருந்தில் ஏறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் காலை மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துகளில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி வால்பாறை பழைய பேருந்து நிலையத்தின் அருகே இடவசதி ஏற்படுத்திக் கொடுத்து பேருந்துகளை ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்று இறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே வால்பாறை மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp