காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும்
நடவடிக்கைகளில் காவல் ஆணையர்!!
கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளை நடத்தினார், ஒரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும் புத்தக வாசிப்பை மேம்படுத்த, போலீசாரின் மன இறுக்கத்தை போக்க கோவை மாநகர போலீஸ் சார்பில், போலீஸ் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அடுத்தபடியாக, ஆட்டோக்களில் நூலகம் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஸ்ட்ரீட் லைப்ரரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க வசதியாக, வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். லட்சுமி மில் சந்திப்பில் வாகனயொட்டிகள் சிக்னலுக்காக காத்திருக்கும் போது அவர்களது மன அழுத்தத்தை போக்க இசை ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசாருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் அலுவலகம் முன்பு போக்குவரத்து போலீசார் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெயில் நேரங்களில் சோர்வடையாமல் இருக்க தற்போது அவர்களுக்கு மின்விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்குடையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இது போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.