போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அயராது உழைக்கும் கோவை மாவட்ட காவல்துறை!!

 

கருமத்தம்பட்டி பகுதியில் 2, 00, 000 மதிப்புள்ள 4. 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. , அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கருமத்தம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிமகாநந்தா என்பவரது மகன் மணிநந்தர் மகாநந்தா (32)* என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2, 00, 000 மதிப்புள்ள 4. 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp