வாகனங்களுக்கு இடையூறு செய்து கடமையை சரியாக செய்யும் காவல்துறை இந்த விஷயத்தில் கடமை தவறியது ஏன்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள சோதனைச் சாவடியில் NH209 ல் கிட்டத்தட்ட 6 முதல் 8 இரும்பு தடுப்புகளை வைத்து காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை சரியாக வைக்காமல் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அலங்கோலமாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும் இப்பகுதி பொதுமக்களும் நாள் தோறும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயனில்லை என்கின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் பழைய இரும்பு பாத்திரம்
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்ற நகைச்சுவை நினைவுக்கு வருவதாக சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.
சோதனை என்கிற பெயரில் காவல்துறையினர் இப்பகுதியில் வசூல் வேட்டை செய்து வருகின்றனர். கால்நடை ஏற்றி வரும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை வழிமறித்து 100 முதல் 500 வரை வசூலிக்கின்றனர் மேலும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தினசரி டோக்கன் என்ற அடிப்படையில் கையூட்டு பெறுகின்றனர்.
இதைத் தவிர வாகனங்களில் இருந்து காய்கறி, பழங்கள், தேங்காய் உள்ளிட்டவற்றை கேட்டு வாங்கி தன் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இப்படி நாள்தோறும் தன் கடமையை சரியாக செய்து வரும் காவல்துறை சோதனைச் சாவடி தடுப்புகள் சாய்ந்து விபத்து ஏற்படு வண்ணம் இருப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இத்தனை இரும்பு தடுப்புகள் வைத்து வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கலாமா..?
என்ற கேள்வி என் மனதில் எழுகின்றது இதை யாரிடம் கேட்பது தெரியவில்லை.
மதிப்புக்குரிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நான் சொல்வது பொய் என்றால் நீங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்த சமூக ஆர்வலர்.
-M.சுரேஷ்குமார்.