ஆழியார் அணை பூங்காவில் அத்துமீறும் மர்மகும்பல்!
கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!
ஆழியார் அணை பூங்காவிற்கு வரும் காதல் ஜோடியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடும் மர்ம கும்பல்.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஆழியார் அணை பூங்கா மற்றும் கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மர்ம கும்பல் அவ்வப்போது செல்போன் பறிக்கும் சம்பவங்களும் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆழியார் அணை பூங்காவிற்கு வந்த காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற மர்மகும்பல் காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த காதல் ஜோடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆழியாருக்கு சுற்றுலா வரும் நபர்களிடம் மர்ம கும்பல் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. குறிப்பாக காதல் ஜோடிகளிடம் இந்த கைவரிசையை மர்ம கும்பல் அரங்கேற்று வருகிறது. காதலர்கள் புகார் தெரிவிக்க தயங்குவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.