கோவை சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு பலி!

சிட்கோ அருகே

NALAIYA VARALARU

கோவை சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு பலி!

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார், இதையடுத்து ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலெட் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார், தகவலறிந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போத்தனூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 82 வயதான சண்முகம் என்பதும், இவர் புதன்கிழமை காலை ஈச்சனாரி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றதும், அப்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய நிலையில், சிட்கோ அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp