தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி தெர்மல்நகர் கோயில்பிள்ளை நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் பிரசாந்த் (33), இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (TTPS) கடந்த 11 வருடங்களாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். பிரைமரி கிரசர் 2 பிரிவில் நேற்றுஇரவு பணியில் இருக்கும்போது 11.30 மணியளவில் உடைமாற்றும் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகவல் அறிந்து இரவு ரோந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, டிடிபிஎஸ் மீட்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஶ்ரீவைகுண்டம் நிருபர் முத்தரசு கோபி.