பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற 2 பேர் கைது!!

பெண்ணை

NALAIYA VARALARU

பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற 2 பேர் கைது!!

கோவை அருகே ரூ.5 லட்சம் கடனை திரும்ப கேட்டதால் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற உறவினர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 61). இவருடைய மனைவி தங்கமணி(54). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம ஆசாமிகளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விசாரணையில் தங்கமணி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்
தனது உறவினரான கன்னியப்பனுக்கு ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் கொடுத்தார். ஆனால் கன்னியப்பனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கன்னியப்பன் தனது நண்பரான குமரன்காடு பகுதியை சேர்ந்த தச்சுத் தொழிலாளி சுதாகர்(30) என்பவருடன் சம்பவத்தன்று தங்கமணியின் வீட்டுக்கு கன்னியப்பன் சென்றார். தங்கமணி வீட்டில் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரும்பு கம்பியால் கழுத்து மற்றும் முகத்தில் தாக்கினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது கழுத்தை இரும்பு உளியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து கொலை செய்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp