NALAIYA VARALARU
வால்பாறை நீதிமன்றம் அருகே மண்டி கிடக்கும் புதர்களால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம்! புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிகளில் நீதிமன்றம், அரசு ரேஷன் அரிசி குடோன், அரசு மண்டபம், படகு இல்லம் மற்றும் அரசு கலைக் கல்லூரி வால்பாறை நகராட்சி ஆணையர் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் புதர்கள் அதிக அளவு உள்ளது.
இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில் வனவிலங்குகள் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளன. புதர்களுக்குள் மறைந்திருக்கும் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விபரீதம் ஏதாவது நடக்கும் முன்னரே இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றினால் பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள்.
உடனடியாக இந்த புதர்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.