NALAIYA VARALARU
வால்பாறை முடீஸ் பகுதியில் புதிதாக போடப்பட்ட நெடுஞ்சாலையில்
தேங்கி நிற்கும் மழை நீர்!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட முடீஸ் பகுதியில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தன. தற்பொழுது அந்த சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக புதுப்பிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பேருந்தில் ஏரிச்செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த புதிய சாலையின் அவல நிலையால் கனமழையில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மலேரியா டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர் .
எனவே மழை பெய்தால் தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.