வெர்மி கம்போஸ்ட் பல கோடி மதிப்புடைய டெண்டர் எதிர்கட்சி ஆட்களுக்குதான்.?

வெர்மி கம்போஸ்ட்

வெர்மி கம்போஸ்ட்

வெர்மி கம்போஸ்ட் பல கோடி மதிப்புடைய டெண்டர் எதிர்கட்சி ஆட்களுக்குதான்!!

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் இருந்து கொட்டப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கு நாற்றம்தான் குனியமுத்தூர் தாண்டி வடவள்ளி வரை வீசுகிறது, கிடங்கில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் அதைவிட நாற்றம் அடிக்கிறது.

பத்து வருட ஆட்சியில் நேரடியாக களம் கண்ட வடவள்ளி ஆசாமி, ஆட்சி முடிந்த பிறகும் நிலா வெளிச்சத்தில் ஆதரவு அதிகாரிகள் துனையுடன் ஊடுருவ ஏற்பாடு செய்துள்ளதாம்

”கோவையில் சேகரிக்கப்படும் பல டன் குப்பைகள் தினமும் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வருகிறது. இதனை தரம் பிரிக்கும் பணிகளில் மூன்று நிறுவனங்கள் இயங்குகிறது ஏற்கனவே கிடங்கில் இருக்கும் பழைய குப்பையை தரம் பிரிப்பது, குப்பைகளை அழிப்பது, மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது என்று இயங்கி வருகிறது இதற்கு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு அதனை எடுக்கும் நிறுவனங்கள் இந்த பணிகளை செய்து வருகிறது. ஒவ்வொன்றுக்கும் கால அளவு உண்டு. அதன்படி மூன்று வருடங்களுக்கு டெண்டர் விடப்படுமாம்.

பல வருடங்களாக இதில் ஈடுப்பட்டு வந்த நிறுவனத்தின் டெண்டர் காலக்கெடு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்தது அதன்பிறகு தற்காலிகமாக ஊழியர்களை வைத்து பணிகள் நடந்து வருகிறது இதில்தான் பல லட்சங்கள் வருமானம் வருகிறது என தி.மு.கவினருக்குள் வீடியோ, ஆடியோ என சமூக தளத்தில் செய்திகள் களை கட்டியது. இந்த பஞ்சாயத்து பொறுப்பு அமைச்சர், துறை அமைச்சர் வரை சென்று விசாரிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் அமைதியாகினர்.

இதற்கிடையில் தற்போது மீண்டும் டெண்டர் விடப்பட அதில் இரு நிறுவனங்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், உள்ளூர் ஆளும்தரப்பினரின் ஒரு நிறுவனமும், ஏற்கனவே கடந்து ஆட்சியில் வெளலூர் குப்பை கிடங்கில் வேலை செய்த, தற்போதைய எதிர்கட்சியின் ஆதரவு நிறுவனத்தின் துணை கொண்டு இன்னொரு நிறுவனம் மட்டும் இதில் கலந்து கொண்டது
விசயம் இதுதான்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

அறிவிக்கப்பட்ட நாள் முதலே எதிர்கட்சியின் ஆதரவுடன் வந்த நிறுவனத்திற்குதான் இந்த டெண்டர் என முடிவு செய்யப்பட்டுவிட்டுதாம். டெண்டர் கோரும் நாள் முதல் திறக்கப்படும் நாள் வரையிலும் இரு நிறுவனங்களுக்கும் பணியை எடுப்பதற்கான முயற்சிகளை செய்தனார். இரு நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் டெண்டர் குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படவில்லை, மாறாக சில நாட்கள் கழித்து உள்ளூர் ஆளும் தரப்பின் நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தொழில்நுட்பத்தில் தகுதியில்லை என்று கூறப்பட்டதாம்.

ஏலம் இரு வகையில் விடப்பட்டது, தொழில்நுட்ப ஏலம் மற்றும் நிதி ஏலம். இதில் தொழில்நுட்ப ஏலத்தில் தகுதியில்லை என்றும், நிதி ஏலத்தில் குறைவான அளவில் தொகை கேட்கப்பட்டிருந்தும் உள்ளூர் ஆளும்தரப்பினரின் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்துள்ளனராம்.

ஒரு டன்னிற்கு குறைவாக கேட்ட உள்ளூர் ஆளும்தரப்பு நிறுவனத்தை விட நூற்றுக்கும் அதிகமான தொகையை உயர்த்தி கேட்ட எதிர்கட்சி ஆதரவு பெற்ற நிறுவனத்திற்கு டெண்டர் உறுதி செய்யப்பட்டதாக தகவல், ஒரு நாளைக்கு நூறு டன் அளவில் கணக்கு வைத்து கொண்டால் கூட மாநகராட்சி அந்த நிறுவத்திற்கு 12,000 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டும். ”ஆக..” வருடத்திற்கு முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பாம். இதுமட்டுமின்றி மூன்று வருடத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வந்த நிறுவனத்தின் துணையுடன் மற்றொரு பெயரில் பணி தொடரப் போகிறதாம்.

‘இன்றும் அரசு அலுவலர்கள் சிலர் கடந்த ஆட்சியில் பணியாற்றிய நிறுவனங்களுக்கே ஆதரவு நிலையில் இருக்கிறார்கள். இதனால் ஆட்சிக்கு வந்தும் பிரயோஜனமில்லை என்று வருத்தப்படுகின்றனர். அடிமட்ட தி.மு.கவினர். இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆட்சியில் டெண்டர் படிவம் கூட வாங்க முடியாது. ஆனால் இந்த ஆட்சி வர வேண்டும் என நினைத்த எங்களை போன்ற மாநகராட்சி உள்ள அரசு அலுவலர்கள் நிலை எப்படி என்று நீங்களே எண்ணி பாருங்கள்” என தகவல்களை வருத்ததுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மாநகராட்சியில் உள்ள முக்கிய புள்ளி.

டென்டர் தேர்வு முடிந்து 3 மாதங்கள் ஆகியும் அதிக அரசுக்கு நஷ்டம் ஏற்படும் விதத்தில் கோரப்பட்ட நிறுவனத்திற்கே டென்டர் வழங்கியும் வர்க் ஆர்டர் இன்று வரை வழங்காமல் இருப்பது ஏன் என்று கேல்வியும் சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். இது  மட்டும் அல்ல டென்டர் நிராகரிக்கப்பட்ட நிறுவனம் தான் தற்போது 6 மாதங்களாக மண் புழூ உரம் தயாரிக்கும் மனையில் பணிகள் செய்து வருகிறதாம் , அவர்களுக்கு பில் வழங்காத வரை அவர்கள் காலி செய்ய மாட்டார்கள் என்று போர் கொடி தூக்கி உள்ளார்களாம். ஆமாம் இந்த பிரச்சனை இத்துடன் முடிய போவதில்லை. தொடரும் என்றே தெரிகிறது. நடக்கவுள்ள மாமன்ற கூட்டத்தில் இதனை பகிரங்கப்படுத்தி விவாதத்திற்கு உட்படுத்த ஒரு டீம் தற்போது தயாராகி வருகிறதாம். அப்படி நடந்தால் குப்பை பிரச்சனை குனியமுத்தூர் தாண்டி ‘வடவள்ளி’ வரை கூட அதன் தாக்கம் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

குறிச்சி பகுதி நிருபர்
-செய்யது காதர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp