3 கார்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மோதி விபத்து!!
காவல் துறையினரின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கடைபிடிக்க மறுக்கும் வாகன ஓட்டிகள்!!
கோவை இராமநாதபுரம் அடுத்த சுங்கம் மேம்பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த நிலையில் இந்த பாலத்தில், மிக ஆபத்தான வளைவுகள் உள்ளதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தது. ஒரு சில உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளது, இதனால் இந்த மேம்பாலத்தில், போக்குவரத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க காவல்துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளையும் வைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் விபத்துக்கள் தவிர்க்க பட்டு வந்தது. ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் காவல் துறையினர் கொடுக்கும் அறிவுறுத்தல்களின் படி நடந்து கொள்வதில்லை, சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தநிலையில் இந்த பாலத்தில், பயணித்த கார் ஒன்று வேகத்தடையை கடக்க, வேகத்தை குறைத்துள்ளது. ஆனால் அந்த காருக்கு பின்னால் அதிக வேகமாக வந்த கார் ஒன்று, முன்னாள் சென்ற வாகனத்தின் மீது பலத்த வேகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது, இந்த நிலையில் இந்த இரு கார்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்றும் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் முன்பக்கத்தில் இருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது, தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 3 கார்கள் விபத்துக்குள்ளான நிலையில், சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கார்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது மேலும் இது குறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.