கோவை டவுன் ராஜவீதி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையும் இணைந்து 11-04-2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் கோவை ராஜவீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த கண் பரிசோதனை முகாமானது திரு K.ராஜா( மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் , ஒண்டிபுதூர்) அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது மேலும் முனைவர் C.M.உமாதேவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைக்க உள்ளார்கள் அது சமயம் பொதுமக்கள் அனைவரும் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
நம்மில் எத்தனையோ பேர் கண்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்து கொள்ள தேவையான பொருளாதார வசதியின்றி இருப்போம் அதுபோன்று உள்ளவர்கள் இது போன்ற இலவச கண் பரிசோதனை முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இந்த செய்தியை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பற்றிய செய்தியை சொல்லி தேவையான நபர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம்.
முடிந்த அளவுக்கு இந்த செய்தியை மற்றவர்களுக்கு கொண்டு சேருங்கள் நண்பர்களே
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் நிறுவனத்திற்கு நமது நாளைய வரலாறு ஆன்லைன் நியூஸ் மற்றும் புலனாய்வு இதழ் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.