பொள்ளாச்சி, உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 அன்று கொண்டாடப்படும். இதையொட்டி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் மரக்கன்று நட்டும் உறுதிமொழி ஏற்றும் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவணபிரகாஷ் தலைமை தாங்கினார்.
மருத்துவமனை தலைமை செவிலியர் தனட்சுமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி
நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு செவிலியர் தினத்தை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டும் செவிலியர்களோடு கேக் வெட்டியும் செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்கள் ஜெயந்தி.ராஜேஸ்வரி சித்ரா ராணி உள்ளிட்ட செவிலியர்கள். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ். கவிஞர் முருகானந்தம்.
நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.