NALAIYA VARALARU
டெக்னாலாஜியின் சப்கான் 8 ஆவது பதிப்பு கண்காட்சி கோவையில் வரும் மே 10 ந்தேதி துவக்கம்…
சிறு குறு உட்பட தொழில் தொடர்பான அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் கோவை கொடிசியா டெக்னாலாஜியின் சப்கான் எட்டாவது பதிப்பு கண்காட்சி கோவையில் வரும் மே 10 ந்தேதி துவக்கம்…
சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும்,சப்கான் 2023 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 10 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. கோவை கொடிசியா இன்டெக் டெக்னாலஜியின் , 8வது பதிப்பாக நடைபெற உள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் சப்கான் 2023 கண்காட்சியின் தலைவர் சஞ்சீவிகுமார் ஆகியோர் பேசினர். இந்தியாவின் முதன்மையான கண்காட்சிகளில் ஒன்றாக சப்கான் இருப்பதாகவும், கொடிசியா இன்டெக் டெக்னாலஜி சார்பாக எட்டாவது பதிப்பாக மே 10 தேதி துவங்கி பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வக இயக்குனர் டாக்டர் ஸ்ரீநிவாச மூர்த்தி துவக்கி வைக்க இருப்பதாகவும், இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த மற்றும் பதிவு செய்திடாத சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தி மற்றும் தொழிலை பொருளாதார வளர்ச்சியில், மேம்படுத்த இக்கண்காட்சி பெரிதும் உதவ உள்ளது எனவும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் சுமார் 20 முதல் 30 ஆண்டுகால தொழில் அனுபவம் பெற்றவர்கள், தாங்கள் சார்ந்துள்ள உற்பத்தி துறை குறித்து பட்டறிவும், புரிதலும் இங்கு கிடைக்க உள்ளது, எனவும், இந்த கண்காட்சியில் 15 பொதுத்துறை நிறுவனங்கள், 17 பெரும் தனியார் தொழிற்சாலைகள், ஒரு வங்கி, உள்ளிட்ட 214 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும், தேவையான தகுதி உள்ள சிறு தொழிற்சாலைகளை தேர்ந்தெடுக்க உள்ளது, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் தங்களது ஆர்டர்களை பெறுவதற்கு தங்களின் உற்பத்திகளை, இங்கு காட்சிப்படுத்த உள்ளது எனவும், சிறு குறு நிறுவனங்கள், நிதி சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்க வங்கி நிறுவனம் உதவும் வகையில், இந்த கண்காட்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.