மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கம் கூட்டம் நடைபெற்றது!!!.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்க இரண்டாவது தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மிகவும் சீரும் சிறப்புமாக அணியாபரநல்லூர் கிராமத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது ஏழை எளிய 75 பெண்களுக்கு விலையில்லா சேலை வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் L.கிஷோர் குமார் அவர்களும், மாவட்ட செயலாளர் வக்கில் R.பிரபு அவர்களும், ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து அவர்களும் ,மாவட்ட விவசாய அணி திட்ட பொறுப்பாளர் செல்வின் சவான் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் P.முருகன் அவர்களின் சக்தி கேந்திரத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் P.விநாயகப் பெருமான் ஒன்றிய செயலாளர் S.குமார் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் A.சிலம்பரசன் சமூக ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் M.சின்னத்துரை கிளைத் தலைவர் S.இசக்கிமுத்து மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.