கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தற்பொழுது கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது இடுக்கி மாவட்டத்தில் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி பகுதியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மழையின் அளவு அதிகரிப்பதால் இடுக்கியில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருவதால் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறது எனது இடுக்கி பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் பயணங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மட்டுமல்லாது மழை அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 25 கேம் சென்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பழைய மரங்களை வெட்டி பாதிப்புகள் ஏற்படுத்தாமல் இருக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன சாலையோரங்களில் வாகனங்கள் அதிகமாக நிறுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட கல்லாறு குட்டியை அணையிலிருந்து அதிகமான தண்ணீர் வருவதால் அப்பகுதி கல்லாறு பாலம் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் என பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.