ஒட்டப்பிடாரம் அருகே கிணற்றின் சிமெண்ட் தளம் இடிந்து விழந்து 2 பேர் பலி 2 பேர் மீட்பு நடவடிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சை சிலோன்காலனியில் கானத்தூர் பண்ணை என்று அழைப்பார்கள் பண்ணையின் உரிமையாளர் திருச்செந்தூரை சேர்ந்த ராமசாமி மகன் தியாகராஜன் என்பவரது அந்தப் பண்ணையில் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானதால் அதனை சரிசெய்வதற்காக சிந்தலகட்டையைச் சேர்ந்த மரியாதஸ் (75), கவர்னகிரியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (50), குலசேகரநல்லூர் திருவடி மகன் அரியநாயகம் (60), வடக்கு ஆரவங்குளம் ஆறுமுகம் மகன் சுப்புராஜ் (45) ஆகியோர் மோட்டாரை சரி செய்யும் பணியில் இருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது திடீரென கிணறு மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் தளம் உடைந்து 4 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றில் பக்கவாட்டில் மர கிளைகள் மற்றும் மண்ணரிப்பு இருந்துள்ளது, இதன் காரணமாக சிமெண்ட் தளம் உடைந்துள்ளது என தகவல். சுமார் 90 அடி ஆளமுள்ள விவசாய கிணறு இந்த கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் உள்ளது. இதையடுத்து அருகில் இருந்த ஐந்தாவது நபர் சென்று பார்த்து பொழுது கிணற்றுக்குள் நால்வரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது தகவல் ஓட்டப்பிடாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. செய்தியை அறிந்த மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி மாரிமுத்து, அரியநாயகம் ஆகிய 2 பேரையும் மீட்டனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மரியதாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்பராஜ் என்பவரை தேடும் பணியில் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்களை வரவழைத்து கடுமையான போராட்டத்துக்கு பின் சுப்புராஜ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் அவர்கள் வழக்குப் பதிந்து விசரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் , ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலா யோகராஜ், மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர் . விரைந்து செயல்பட்ட ஓட்டப்பிடாரம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp