கோவை கொடிசியா வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோயமுத்தூர் புத்தக திருவிழா 7வது பதிப்பு கொடிசியா மற்றும் தமிழக அரசு சேர்ந்து கொடிசியா வளாக அரங்கில் வருகின்ற 21 முதல் 30ம் தேதி வரை நடத்தபட உள்ளது. கடந்த வருடம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டு 6 கோடி மதிப்பிலான புத்தகங்களை விற்பனை செய்யப்பட்டன. இம்முறை 330க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கபட உள்ளது.
மேலும் அதிகபடியான புத்தகங்கள் மக்களிடம் சேரும் வகையில் புத்தக வாசிப்பாளர்கள், எழுத்தாளர்களை அழைக்க உள்ளோம். அரசு பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்பதற்கு அந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த வருடம் நடைபெற்ற புத்தக கண்காட்சியை காண்பதற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்துள்ளார்கள், இம்முறை அதற்கு மேலும் வருவதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். கடந்த முறை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து புத்தகங்களை காட்சி படுத்தி இருந்தனர். பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலும் இங்கே ஏற்பாடு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு கடந்த முறை என்னென்ன பிரச்சனைகள் வந்ததோ அவையெல்லாம் களைந்து நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.