பாஞ்சை இந்திராநகரில் புதிய மின் மாற்றி துவக்க விழா!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் துவங்கி வைத்தார்.

மக்கள் தொகை எண்ணிக்கை பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து ஊராட்சியில் அதிகரித்துக் கொண்டே போகிறது இதனால் மின்சார பற்றாக்குறை மற்றும் தடை அடிக்கடி ஏற்பட்டது இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் ஓட்டப்பிடாரம் உதவி மின் பொறியாளர் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள் அதன்படி 63 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் இந்திரா நகரில் ரூபாய் 8.62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியே துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்வின் போது ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் அவர்கள், வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் , கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் அவர்கள் , மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலா யோகராஜ் அவர்கள் , முன்னாள் பஞ்சாயத் தலைவர் லதா கருணாநிதி அவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர் பெரிய மோகன் அவர்கள் ,பஞ்சாயத்து கிளர்க் சுப்பிரமணியன் அவர்கள், தாசில்தார் வருவாய் அலுவலர்கள் உதவி மின் பொறியாளர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp