புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியில் மகளிர் கபடி போட்டிகள்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூர் அருகே நடுவக்குறிச்சியில் பெண்களுக்கான காபடி போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை தொழிலதிபர் லட்சுமணன் அவர்கள் விஜயலட்சுமி ஸ்டீல்ஸ் கோவை, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் காபடி கழக துணை தலைவர் இளையராஜா அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்த போட்டியில் சுமார் 40க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன நான்கு அணிகள் வெற்றி பெற்றன. முதல் பரிசு செயின்ட் மேரிஸ் காலேஜ் தூத்துக்குடி, இரண்டாம் பரிசு மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோவில்பட்டி, மூன்றாம் பரிசு கரிகாலன் ஸ்டூடண்ட்ஸ் புதியம்புத்தூர், நான்காம் பரிசு புன்னக்காயல்

அணிகளுக்கு அனைத்து பரிசுகளையும் வழங்கியவர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் இந்தப் போட்டிக்கான அனைத்து வெற்றிக்கோப்பையும் வழங்கியவர் O.T சிவகுமார் அவர்கள், சிறந்த ரைடர் மற்றும் சிறந்த பிடியாளர்களுக்கான பரிசு வழங்கியவர் சிலம்பரசன் தமிழ்நாடு தீயணைப்பு துறை மேட்டூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநில அளவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவிக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 5000 வழங்கி கௌரவித்தார் ஓட்டப்படாத ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்ளும் மூன்று மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்கள் , இலட்சுமணன் அவர்கள் இளையராஜா அவர்கள் மற்றும் சிவகுமார் அவர்கள்.

இந்த விழாவில் சுடலைமணி ஊராட்சி மன்ற தலைவர் முறம்பன் அவர்கள் கரிகாலன் முன்னாள் முதல்வர் உடற்கல்விகள் கல்லூரி டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் மற்றும் நடுவக்குறிச்சி இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp