ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மனோஜ் முனியன் வட்டாட்சியர் அவர்களை இடைக்கால பணி நீக்கம் செய்ததை கண்டித்து காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தனி வட்டாச்சியர் திரு. மனோஜ் முனியன் என்பவர் உயர் நீதிமன்றம் உத்தரவு படி கடந்த 09.08.23அன்று ஆக்கிரமப்பை அற்றும் போது பாட்டா உள்ள வீட்டையும் சேர்த்து அகற்றியத்தால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனி வட்டாச்சியரை தற்காலிக பதவி நீக்கம் செய்தார்.

இதனை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தனி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் வருவாய் அலுவலர்கள் கையெழுத்திட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனோஜ் முனியன் அவர்களின் இடைக்கால பணி நீக்கத்தை உடனே ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp