சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா (17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார்.
திருமயம், பில்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பாத்திமாவும், தேவியும் தோழிகள். இருவரும் திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022ல் மேல்நிலை வகுப்பில் ஒன்றாகப் படித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், தனது தோழி பாத்திமாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட தேவி, ‘தனது மனது சரியில்லை என்றும், உன்னை பார்க்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். இதனால், பாத்திமாவும் தனது தோழி தேவியை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டுக்கு வந்த தேவியை பாத்திமாவின் பெற்றோர்களும் அன்புடன் வரவேற்று, அவருக்கு விருந்து வைக்க பிரியாணி தயார் செய்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதிய உணவு நேரத்தில், சாப்பிடுவதற்காக அறையில் இருந்த தேவியை அழைத்துள்ளனர். பதில் இல்லாத காரணத்தால் வீடு முழுவதும் தேடிய போது தேவி வீட்டில் இல்லாதது தெரிய வந்தது. பின்பு அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், தேவி இருந்த அறையை பாத்திமாவின் தாயார் ஆய்வு செய்தபோது அங்கிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவியின் மீது சந்தேகம் அடைந்த பாத்திமாவின் தாயார், திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பெயரில் வழக்குப் பதிவு செய்த நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி, தனது தலைமையில் குழுவினை அமைத்து தேவியை தேடும் பணியில் ஈடுபட்டார்.
தீவிர தேடுதல் வேட்டையின்போது காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் தேவி நகையை தந்து அதற்கு பதிலாக வேறு நகையை பெற்றுக் கொண்டிருந்தபோது திருப்புத்தூர் காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்பு காவல் ஆய்வாளர் கலைவாணி அச்சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், பாத்திமா வீட்டில் இருந்த சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் எடையுள்ள பல்வேறு நகைகளை திருடிய பின்பு, அவற்றை ஒரே கடையில் விற்றால் சந்தேகம் வரும் என்பதால் திருப்புத்தூர் மற்றும் காரைக்குடியில் உள்ள 4 கடைகளில் திருட்டு நகைகளை கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக கடைகளிலிருந்து புதிய நகையை பெற்றதாகவும், தான் காதலிக்கும் நபரை திருமணம் செய்து கொள்வதற்கான செலவிற்காக இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
திருட்டு நடைபெற்ற 3 மணி நேரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, திருடிய நபரை பிடித்த காவல் ஆய்வாளர் கலைவாணியை பலரும் பாராட்டி வருகின்றனர். 17 வயது சிறுமி தனது தோழியின் வீட்டில் நகைகளை திருடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக், சிவகங்கை.