இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தை மோதவிட்டு வழிப்பறி!!!

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் 48 வயதான சதீஸ், இவர் எல். அண்ட் டி பைபாஸ் ரோட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார், நேற்று முன்தினம் இரவு 11. 30 மணியளவில் சதீஸ் கடையை மூடி விட்டு அவரது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

மொபட் போடிபாளையம் பிரிவை தாண்டி சென்று கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது பின்னால் இருந்தவர் சதீசிடம் முகவரி கேட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து மொபட்டின் வேகத்தை குறைத்த அவர் முகவரி கூறிக்கொண்டு இருந்தார் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் மொபட்டின் மீது மோட்டார் சைக்கிளை மோதினர்.

இதில் நிலைதடுமாறிய சதீஸ் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதீசின் மொபட் மற்றும் செல்போனை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து சதீஸ் மதுக்கரை காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மொபட் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp