தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டது, பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்:
தொடக்கப் பள்ளியில் 1,2,3, மற்றும் 4,5 ஆகிய வகுப்புகளுக்கு என்னும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் திட்டம் கொண்டுவரப்பட்டது , இத்திட்டத்தின் மூலம் கற்றல் கற்பித்தல் திறனை சோதிக்க தற்போது ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை கொண்டு தேர்வு நடத்தப்பட்டு கற்றல் விளைவுகள் தெரிந்து கொள்வதற்கு அறிவித்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் இன்று 8/9/2013 அன்று வட்டார கல்வியாக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரசு இதற்கு தீர்வு காணவிட்டால் மாவட்டம் தழுவிய வட்டார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் செந்தூர்பாண்டி தலைமை வகித்தார் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிவ செல்வ சுந்தர்ராஜன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் சாலமன் மாவட்ட துணை தலைவர் கலந்து கொண்டார் கோரிக்கை கோரிக்கை விளக்கவுரை ராமசுப்பிரமணியம் வட்டார செயலாளர் வழங்கினார் நன்றியுரை அருணாச்சலம் வட்டார பொருளாளர் சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.