தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சாமிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் கோவில் 14ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. ஆண் பெண் இரு பாலாரும் நடனம் ஆடியும் கண்ணனை வழிபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் நடுத்தெரு வழியாக சென்று கோவில் விட்டில் வழிபாடு செய்தனர். மேலும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்சசியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் பூஜை செய்து தொடங்கி வைத்தார், வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு நடைபெற்றது.
இவ்விழாவில் சாமிநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் குடும்பத்துடன் கிருஷ்ணர் ராதை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். சாமிநத்தம் அதிமுக கிளை கழக செயலாளர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.