சிங்கம்புணரி அருகே பாஜக பிரமுகர் விபத்தில் பலி!

சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் அருண்குமார் (வயது 25). பா.ஜ.க கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சிக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். முட்டாகட்டி என்ற இடத்தைக் கடந்து பிரான்மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியின் பக்கவாட்டில் அருண்குமாரின் இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அருண்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் அருண்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், லாரியின் ஓட்டுநர் குன்னானம்பட்டியைச் சேர்ந்த ஹரி ராமன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

முட்டாக்கட்டியிலிருந்து பிரான்மலை செல்லும் சாலை, குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்களைப் பாதுகாக்க இந்தச் சாலைைய விரைவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp