தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மாவீரன் சுந்தரலிங்கம் 224 வது நினைவு தினம் அனுசரிப்பு.!!

தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மாவீரன் சுந்தரலிங்கம் 224 வது நினைவு தினம் அனுசரிப்பு.!!!

உலகின் முதல் தற்கொலை படை தளபதி மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களின் 224 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் சுந்தரலிங்க நகரில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நினைவு தினம் வரலாறு:

1799 செப்டம்பர் 8ஆம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண் வடிவுடன் ஆடுமெய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் முன்னிலையில் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், கருங்குளம் ஒன்றிய தலைவர் நங்கமுத்து , விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி, விவசாய அணி மாவட்ட திட்டம் பொறுப்பாளர் செல்வின் சவான், ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கதிரவன், கப்பல் மணிகண்டன் , அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் தலைமையில், முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு சுந்தரலிங்கம் நகரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் லிங்கராஜ் மற்றும் திரு போத்திராஜ்(IT wing மாவட்டதலைவர்),ஒன்றிய பொது செயலாளர் மாரிமுத்து மற்றும் முருகபெருமாள்,பொருளாளர் ராமர்,பேச்சியம்மாள் (மகளிரணி மாவட்ட செயலாளர்),ராம்குமார்(IT Wing சட்டமன்ற பொறுப்பாளர்)வெங்கடேஷ் ( இளைஞரணி ஒன்றிய பொதுசெயலாளர்), பாலகிருஷ்ணன்(கூட்டுறவு ஒன்றிய துதலைவர்), வர்கிஸ்( கூட்டுறவு ஒன்றிய செயலாளர்),முனியசாமி, சதிஷ்குமார் (கிளை தலைவர்)மாரியம்மாள்( கிளை பொறுப்பாளர்),ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp