தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் பேரிலோவன்பட்டி காசநோய் பிரிவு குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கமலாபுரம் கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவி முருகேஸ்வரி தலைமை தாங்கி காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி முகாமை துவக்கிவைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந் நிகழ்வில்சமூக ஆர்வலர் போத்திராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் செல்வரதி, சுகாதார பார்வையாளர் அமுதா, இடைநிலை சுகாதார பணியாளர்கள் செல்வி மோனிஷா, புஷ்பலட்சுமி, பாண்டி மீனா, சந்தியா, சுகாதார தன்னார்வலர்கள் மல்லிகா, இராஜேஸ்வரி, ஜோசியா, காளியம்மாள், ஜோதி, ராணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.