ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை கல்லூரி அமைக்கப்படுமா..? எதிர்பார்ப்பில் மக்கள்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி வரையறைக்கு முன் பசுவந்தனை அருகில் நாகம்பட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி கீழ் செயல்படுகிறது. போக்குவரத்து மற்றும் பல்வேறு காரணங்களாக சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கிராமங்கள் மணியாச்சி புளியம்பட்டி சீவலப்பேரி குறுக்குச்சாலை கச்சேரி தளவாய்புரம் ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் நாகம்பட்டி கல்லூரிக்கு சென்று வருவதில் போக்குவரத்து சிக்கல் உள்ளது. 30க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் தூத்துக்குடியை நம்பியே உள்ளனர்.
எனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி அமைந்தால் தொகுதி வளர்ச்சி அடையும். கல்லூரிக்கான இடம் ஓட்டப்பிடாரம் திருநெல்வேலி சாலையில் அல்லது ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் சாலையில் கல்லூரி அமைந்தால் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.