தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை எட்டயபுரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கடம்பூர் ராஜு பேச்சு.!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம் சந்திரன் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசுகையில்:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நின்று ஜெயிக்க முடியாது அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி பாஜக ஆக இருந்தாலும் சரி. நீங்கள் டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம் தமிழ்நாட்டில் நீங்கள் கூஜாதான் , இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்.வாரிசு அரசியலில் ஈடுபடுவது தான் திமுக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எப்பொழுதும் அதிமுகவின் எஃகு கோட்டை திமுகவின் பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள் இனிவரும் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் மேலும் விவசாயி ஒருவரை முதலமைச்சராக ஆக்கியது அதிமுக என பேசினார்.
பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் அவர்கள் சிறப்பாக செய்ததற்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட கவுன்சிலர் சத்யா உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.