மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்..தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கட்டுபாடுகளை விதித்த காவல்துறை!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை நகரில் இன்று (அக்.,30) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்விவரம்: இன்று காலை 6:00 முதல் இரவு 10:30 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை.விழாவிற்கு வரும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.நத்தம்ரோடு, அழகர்கோவில் ரோடு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையாக மாநகராட்சி அருகே பெரியார் சிலையில் திரும்பி ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர்., பாலம், காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு பகுதியிலிருந்து நத்தம் ரோடுக்கு செல்லும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக புதுநத்தம் ரோட்டுக்கு செல்லவேண்டும்.மாட்டுத் தாவணியில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் கே.கே.,நகர், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன்சாலை சந்திப்பு, கணேஷ் தியேட்டர் சந்திப்பு, காமராஜர் ரோடு வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.வடக்கு வெளி வீதியில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள். பாலம் ஸ்டேஷன் ரோடு, எம்.எம்., லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, இ2இ2 ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல வேண்டும். மேலமடை பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பு.குருவிக்காரன்சாலை சந்திப்பு, கணேஷ் தியேட்டர் சந்திப்பு, காமராஜர்ரோடு வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல போலீசார் அனுமதித்த வாகனங்களை தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.கோரிப்பாளையம் தேவர்சிலை சந்திப்பிற்கு செல்ல எந்த ஒரு இருசக்கர வாகனத்திற்கும் அனுமதி இல்லை.இவ்விழாவிற்கு வரக்கூடிய இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் மைதானம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் மற்றும் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, மேளக்கார தெரு பகுதிகளில் நிறுத்த வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட மாநகர் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

– தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp