குதிரைகுளம் ஊராட்சியில் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குதிரைகுளம் ஊராட்சி ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன் அவர்கள், குதிரைகுளம் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் சண்முகையா அவர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன் அவர்கள் , கிரி அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts