தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உமரிக்கோட்டையில் இருந்து தளவாய்புரம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு வழி தடத்திலிருந்து இரு வழி தடமாக மாற்றுவதற்கு தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடி 73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைத் தொடர்ந்து சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவக்க நிகழ்ச்சி உமரிக்கோட்டையில் நேற்று நடைபெற்றது இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்துகொண்டு கொடி அசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மூன்று மாதத்தில் நிறைவுபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்களிடம் கோரிக்கைகளை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.