மூணாறில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனை முன்பு பெண் தொழிலாளி போராட்டம்!!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்ட தாக கூறி தனியார் மருத்துவமனை முன்பு பெண் தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான தேவிகுளம் எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்டத் தொழிலாளி செல்வமணி 44. இவர் நேற்று மூணாறில் டாடா மருத்துவமனை முன்பு தரையில் படுத்து போராட் டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தோட்ட நிர்வாகத்தினர், போலீசார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தினர் ஆகியோர் செல்வமணியின் கணவர் பாக்கிய ராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். அதனையடுத்து அவர் மனைவி செல்வமணியுடன் மருத்துவ மனை வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அது குறித்து பாக்கியராஜ் கூறுகையில், எனது மனைவிக்கு டாடா மருத்துவமனையில் ஏப்.15ல் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பபை அகற்றப்பட்டது. அப்போது சிறுநீர் வெளியேறுவதற்காக இணைக்கப்பட்ட குழாய் மே 25ல் அகற்றினர். அதன் பிறகு சிறுநீர் வெளியேறிய வண்ணம் இருந்ததால் பல முறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றோம். அப்போது பயறு வகைகளை உண்டால் சரியாகி விடும் என டாக்டர்கள் கூறினர்.

அதன் பிறகும் சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனை நிர்வாகம் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் பையில் ஆழத்தில் துளை இருப்பதாக தெரிய வந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாடா மருத்துவமனை யில் நடந்த தவறால் எனது மனைவி நடமாட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம். நடத்துவோம், என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அஜித்.
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp