கோவை மாவட்டம் வால்பாறை என்றாலே தேயிலை தான் நினைவுக்கு வரும் அதே சமயம் தேயிலை என்ற ஒற்ற சொல்லில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேயிலைத் தொழிலுக்கு ஆள் பற்றாக்குறை நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அழியும் நிலையில் தேயிலை உற்பத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து வால்பாறை பகுதியைச் சேர்ந்த C I T U, P. பரமசிவம் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம். ஆள் பற்றாக்குறை,நிதி நெருக்கடி குறிப்பாக பருவநிலை மாற்றத்தால் தேயிலைச் செடிகளுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்காமல் பல்வேறு விதமான நோய்கள் உருவாகும் நிலையில் பல்வேறு விதமான மருந்துகள் தெளித்து நோயிலிருந்து தேயிலை செடியை பாதுகாக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்க முடியாமலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாமலும் சிரமப்படுகிறோம் என்று அரசு மற்றும் தனியார் தேயிலை எஸ்டேட் முக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை,வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மூன்று தலைமுறையாகதேயிலை தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் வாரிசுகள் வேலை செய்ய விருப்பமில்லாததால் தேயிலைத் தொழில் பாதிப்படைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் அழிந்து வரும் தேயிலை தோட்டங்களுக்கு நிதி உதவி அளித்தும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய சுமார் 5000 குடும்பங்கள் ராமேஸ்வர மண்டபத்தில் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட தேயிலை தோட்டங்களில் வேலை கொடுத்து அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களை பாதுகாப்பதோடு அவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்த முடிவின்படி ஒவ்வொரு பகுதியிலும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களை அரசு மற்றும் தனியார் தேயிலை தொட்ட பகுதிகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களால் தேயிலை உற்பத்தி அதிகமாகப் பட்டது அதே போல் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது குறிப்பாக தேயிலை பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை கடந்த 50 ஆண்டுக்கு முன்பே பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அழியும் நிலையில் உள்ள தேயிலைத் தொழிலையும் அதை நம்பி உள்ள மக்களையும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தேயிலை தோட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்று நாளைய வரலாறு பத்திரிக்கையின் செய்தியின் வாயிலாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு மனு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.