கோவையில் பிளாஸ்டிக்கால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்வதற்காக 79. 73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து, சமூகத்தில் ப்ளாஸ்டிக் பொருட்களால் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து தனியார் கல்லூரி( பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ) மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது மறுசுழற்சி செய்யப்பட்டாத பிளாஸ்டிக் கழிவுகள்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மாணவர்களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியை கல்லூரி துவங்கியது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி, மாணவர்களின் துணையுடன் மொத்தம் 79. 73 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இவர்களது இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் கல்லூரி நிர்வாகத்துக்கு கின்னஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.