கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் காளிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சுய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை சார்பில் சம்பத்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து
மாணவர்களுக்கு கை கழுவும் படிநிலைகள் மற்றும் காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை மாணவர்கள் எவ்வாறு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களிடையே எளிமையாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில்
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தம் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சிந்தனையோடு,
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.