கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு அரசு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது வால்பாறை கிளைக்கு புதிதாக சில பேருந்துகள் வந்துள்ளன. இவை வால்பாறை பகுதியில் இருந்து மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் பயணித்து வருகின்றனர். ஆனால் வால்பாறையில் ஓடக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளில் சில மிகவும் பழுதடைந்த நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் பேருந்து பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சில சமயங்களில் பேருந்து விபத்துகளும் ஏற்பட்டு காயம் மற்றும் உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே வால்பாறை பகுதிக்கு அதிகப்படியான புதிய பேருந்துகளை கொடுத்து மிகவும் பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் வாகன ஓட்டுநர்கள் உட்பட அனைவரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.