ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது இதுகுறித்து தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் சமூக ஆர்வலர் கேள்வி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருவதாக ஆனைமலை காவல்துறையினருக்கு தெரியவந்த நிலையில் நேற்று 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆனைமலை திரௌபதி அம்மன் கோவில் அருகே சக்திவேல், பங்களா சந்திப்பு அருகே ராமசாமி, சக்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே கோகிலவாணி உள்ளிட்ட மூவரை கைது செய்து நூற்றுக்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ. 2030 ஐ பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவாயினும் விற்பது குற்றமே அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதேசமயம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் நேரடியாக விற்பனை செய்வது குற்றம் என்றால் மறைமுகமாக தமிழக முழுவதும் online மூலம் நாள்தோறும் கோடி கணக்கான ரூபாய்க்கு லாட்டரி விற்பனை நடைபெறுவது குற்றம் தானே இதை தமிழக அரசும் காவல்துறையும் எப்படி தடுப்பார்கள்
என்ற கேள்வியோடு கடந்து சென்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவரின் கேள்விக்கு யார் விடை சொல்வார்கள் என்ற சிந்தனையோடு

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp